மதுரை, டிச.3- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்ட சார்பாக இந் திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் SSC (Staff Selection Commission) போட்டி தேர் வுக்கான இலவச பயிற்சி வகுப்பின் தொடக்க விழா சனிக்கிழமை அன்று கீழ வெளி வீதியில் உள்ள தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலை வர் கே.அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் எம்.ஜான்சன், மாவட் டக் குழு உறுப்பினர் எம்.மாய ழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செய லாளர் என்.கணேசமூர்த்தி வரவேற்றார். பயிற்சி வகுப்பு ஒருங்கி ணைப்பாளர் டி.இராமச்சந்தி ரன் அறிமுக உரை நிகழ்த்தி னார். பயிற்சி வகுப்பினை தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் மு.பூமிநாதன், பல் சமய உரையாட முன்னாள் இயக்குநர் அருட்தந்தை பெனடிக் பர்ன பாஸ், தூய மரியன்னை பேராலய பங்குத்தந்தை ச.மரிய நாதன், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை சேவி யர் ராஜ், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ்.ஏ.லியா கத் அலி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பயிற்சி வகுப்பினை மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். மாவட்டத் துணைச் செயலா ளர் போணிபேஸ் நன்றி கூறி னார். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் டி.குமர வேல், கே.தமிழ்செல்வி, காளிமுத்து, பி.விஜய லட்சுமி, பாண்டியன் ஆகி யோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் படித்த இளைஞர் இளம் பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு பணிக்கு செல் வதற்காக தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு முன் முயற்சி எடுத்து வரு கிறது அனுபவம் மிக்க ஆசிரி யர்களை கொண்டு வாரந் தோறும் சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் வகுப்பு கள் நடைபெறுகிறது.