மயிலாடுதுறை, நவ.4 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தா லம் ஒன்றியம் சேத்தூர் ஊராட்சியில் பட்டியல் வகுப்பு குடும்பங்கள் வசிக் கும் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக நடக்க முடியாத நிலையில் உள்ளதை கண்டித்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் கிளைத் தலைவர் மதி வாணன் தலைமையில் கொட்டும் மழை யில் வெள்ளியன்று போராட்டம் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆனந்தராஜ், வெற்றிச்செல் வன், மாவட்ட துணைச் செயலாளர் தவசி, முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காளிமுத்து மற்றும் உறுப்பி னர்கள் கண்டன முழக்கமிட்டனர். சேத்தூர் ஊராட்சி மஞ்சக் கொல்லை என்கிற பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பட்டியல் வகுப்பு குடும்பங் கள் வசித்து வருகின்றன. இப்பகு திக்கு செல்லும் சாலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலை யாகவே இருப்பதால், மழைக்காலங் களில் நடந்துகூட செல்ல முடிய வில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாக இருக்கிறது. பொதுமக்களும், மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடி யாக மண் சாலையை சீரமைப்பதோடு, விரைவில் புதிய சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்றுகளை நட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.