மதுரை, ஜூலை 21-
மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து மதுரையில் யானை மலை மீது ஏறி சில்வர் பட்டறை தொழிலாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத் தில் 75 நாட்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஒன்றிய -மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துவருவதாக எதிர்க் கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன. இந்நிலையில் கொடூ ரத்தின் உச்சமாக குக்கி பழங்குடியின 2 பெண்களை நிர்வாணமாக்கி, ஏராளமான ஆண்கள் முன்னிலையில் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டு மக்களிடம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் நிகழ்ந்துள்ள இந்த கொடூரத்தைக் கண்டித்தும் அந்த கயவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஜூலை 21 வெள்ளியன்று மதுரை யா. ஒத்தக்கடையில் உள்ள யானை மலை மீது ஏறி நூற்றுக்கும் மேற்பட்ட சில்வர் பட்டறை தொழிலாளர்கள் மற்றும் அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உண்மை அறி யும் குழு அமைக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பும், தெற்கு வாசல் பகுதி யில் முஸ்லிம் அமைப்புகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.