திருச்சிராப்பள்ளி, மே 17-
ரயில் நிலைய பயணச்சீட்டு ஆய்வா ளர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை வருவாய் நிலையைக் காட்டவில்லை என்று கூறி இடமாற்றம் செய்வதைக் கண்டித்தும் ரயிலில் ஸ்லிப்பர் பெட்டிகளில் அதிகப்படி யான வருமானம் காட்டவில்லை எனக் கூறி 11 பயணச் சீட்டு ஆய்வாளர்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு (சிஐடியு) சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஸ்லீப்பர், டெப்போ சூப்பர்வைசர் கள், டிக்கெட் பரிசோதகர்கள் கடந்த ஒன் பது நாட்களாக திருச்சிராப்பள்ளி கோட்டத் தில் கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றி னர்.
கோரிக்கைகளை பரிசீலிக்க மறுக்கும் திருச்சிராப்பள்ளி கோட்ட கமர்சியல் நிர்வா கத்தைக் கண்டித்து திருச்சிராப்பள்ளி மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது. கோட்டத் தலைவர் கரிகாலன், பொதுச்செயலாளர் ஹரிலால், கோட்டச் செயலாளர் மாதவன், துணைப் பொதுச் செயலாளர்கள் ராஜா, சரவணன், உதவிக் கோட்டச் செயலாளர்கள் சம்பத் குமார், அழகிரி, ரஜினி, சிவக்குமார், தன பால். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.