திருவாரூர், ஆக.4 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூ ராட்சி பகுதி தண்டலை கிளையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மறைந்த தோழர் பி.ராஜா முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. வெள்ளியன்று அவரது இல்லத் தில் நடந்த நிகழ்வுக்கு, குட வாசல் நகரக்குழு செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ராஜா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் குடவாசல் தெற்கு பகுதி ஒன்றிய குழு செயலாளர் எம்.கோபிநாத், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா மற்றும் வெகுஜன அரங்கத்தினர் வீரவணக்கம் செலுத்தினர்.