தஞ்சாவூர், மார்ச் 11- தியாகி வாட்டாகுடி இர ணியன் தங்கை மகனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பின ருமான தோழர் ஆர். பெரியசாமி, பட்டுக் கோட்டை கரிக்காட்டில் உள்ள அவரது இல்லத் தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருடைய இறுதிச் நிகழ்ச்சி திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் மூத்த தலைவர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், என்.வி. கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி, மதுக்கூர் எம். அய்யநாதன், மூத்த தோழர் மெரினா ஆறு முகம், பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு உறுப் பினர்கள் ரெ.ஞானசூரியன், பெஞ்சமின், முருக.சரவணன், விதொச ஒன்றியத் தலை வர் தமிழ்ச்செல்வன், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.