திருச்சிராப்பள்ளி, மே 16-
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் கே. வரத ராசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் செவ்வா யன்று திருச்சிராப்பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருச் சிராப்பள்ளி வெண்மணி இல்லத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலா ளர் ராஜா தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச் செல்வன், லெனின், பகுதி செயலாளர் ரபீக்அஹமது, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, தீக்கதிர் திருச்சிராப்பள்ளி பதிப்பு மேலாளர் ஜெயபால் உட்பட ஏராளமானோர் கே. வரதராஜனுக்கு செவ்வணக் கம் செலுத்தினர்.
கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் தோ ழர் கே.வரதராசன் இல்லத் தில் நடந்த நினைவு தின நிகழ்விற்கு பகுதிக்குழு உறுப்பினர் கோவிந்தன் தலைமை வகித்தார். கட்சிக் கொடியை மூத்த தோழர் விஜயலெட்சுமி ஏற்றினார். பகுதிச் செயலாளர் தர்மா, தீக்கதிர் திருச்சிராப்பள்ளி பதிப்பு முன்னாள் பொது மேலாளர் அனந்தராஜன், புற நகர் மாவட்டக்குழு உறுப்பி னர் சம்பத், அருள்மொழி, வெங்கட்ராமன், வள்ளியப் பன், முத்து, செல்லமுத்து, ஜெய், சந்துரு உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.