districts

img

வி.தொ.ச மத்தியக் குழு முன்னாள் உறுப்பினர் தோழர் கே.செல்லம்மாள் காலமானார்

திருச்சிராப்பள்ளி, ஜன.8 - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் மத்தியக் குழு உறுப் பினரும், திருச்சி புறநகர் மாவட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான தோழர் கே.செல்லம்மாள் வெள்ளியன்று கால மானார். பிச்சாண்டார் கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தோழர் செல்லம் மாள் உடலுக்கு அகில இந்திய விவசாய  தொழிலாளர்கள் சங்க மாநில செயலாள ரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத் துரை, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில  துணைத் தலைவர் கே.முகமதலி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க  மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம்,  மாநில பொருளாளர் எஸ்.சங்கர், திருச்சி புற நகர் மாவட்ட தலைவர் ஜெ.சுப்பிரமணிய , மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி, மாநகர் மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ், மாவட்ட செயலாளர் என்.தங்கதுரை, சிஐடியு மாவட்ட  தலைவர் எம்.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் கே.சிவராஜ், சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன்,  மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் ஏ.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.சம்பத், மாதர் சங்க மாவட்டத் தலை வர் பி.லிங்கராணி, மார்க்சிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் கே.வி.எஸ். இந்துராஜ், லால்குடி ஒன்றிய செயலாளர் சி.ஜெகதீசன்,  புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் டி.ரஜினி காந்த், துறையூர் ஒன்றிய செயலாளர் எம். ஆனந்தன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலா ளர் தளுகை ஆர்.முத்துக்குமார் உள்பட கட்சியினர், வெகுஜன அமைப்பினர், பொது மக்கள் தோழர் செல்லம்மாள் உடலுக்கு மலர்  வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அஇ விதொச மாநில தலைவருமான ஏ.லாசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

;