மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் தோழர் ஜோதிபாசு நினைவு தின நிகழ்ச்சி மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய குழு சார்பில் திங்களன்று திருவெள்ளரை விவசாய சேவை மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் தலைமை வகித்தார். குன்னாகுளம் கிளைச் செயலாளர் ரெங்கநாதன், முருகேசன், மோகன், இளங்கோவன், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.