districts

img

தோழர் ஜோ.ஜெருசலேம் காலமானார்

திருவாரூர், மே 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடா மங்கலம் முன்னாள் நகரச் செயலாளர் மறைந்த சி.டி.ஜோசப்பின் துணைவியார் ஜோ.ஜெருசலேம், கொத்தமங்கலத்தில் உள்ள அவர் இல்லத்தில் சனிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார் இவர் கட்சியின் நீடாமங்கலம் பேரூராட்சி  மன்ற துணைத் தலைவர் ஜோ.ராபர்ட் பிரை ஸின் தாயார் ஆவார். அம்மையாரின் மறைவு  செய்தி அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  வீ.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் அம்மையா ரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி, வி.எஸ்.கலிய பெருமாள், எம்.கலைமணி மற்றும் மாவட்ட,  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். சனிக்கிழமை மாலை அன்னா ரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  அனைத்து அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.