districts

img

தோழர் இரா. தாமோதரன் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்

மன்னார்குடி, பிப்.11-  திருவாரூர் மாவட்ட தமுஎகச முன்னாள் தலை  வர் தோழர் ஆர். தாமோதரன் மூன்றாவது நினைவு தினம் மன்னார்குடியில் கடைபிடிக்கப்பட்டது.  சிபிஎம் நகரக் குழுவின்  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.தாமோ தரன் உருவப்படத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.பி. ஜோதிபாசு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஜி. தாயு மானவன், கட்சியின் மூத்த  தோழர்கள் பி. சந்திர சேகரன், ஜி. ரகுபதி, நகரக் குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். தமுஎகச சார்பில் கிளைத் தலைவர் கேவீ. பாஸ்கரன், செயலாளர் டி. சிவசுப்ரமணியன் ஆகியோர் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், கவிஞர் சரஸ்வதி தாயுமானவன் கவிதாஞ்சலியும் நடை பெற்றது.  இரா. இயேசுதாஸ் கே.பிச்சைக்கன்னு மற்றும் எல்.ஐ.சி அரங்கத்தினர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.