தஞ்சாவூர், நவ.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், குத்தகை விவசாயிகளின் நலனுக்காக பாடு பட்டு மறைந்த, ஜி.வி என அழைக்கப்பட்ட பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் கோ. வீரய்யன் நினைவு தினம் சனிக் கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. சிபிஎம் தஞ்சை மாவட்டக் குழு அலுவலகத்தில் தோழர் ஜி.வி-யின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேராசிரியர் அருணன், அவ ரது துணைவியார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கோ.நீல மேகம், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் க.சந்துரு, மாநகரக் குழு உறுப்பினர் வீ.கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் நாச்சியார்கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல் தலைமை வகித் தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். திருவாரூர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்டத் தலைவர் ஜி.பழனிவேல், மூத்த தோழர் எஸ்.கிருஷ்ணன், நகரச் செயலாளர் எம்.தர்ம லிங்கம், வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சிவா, ஒன்றி யச் செயலாளர் ஜெ.வானதீபன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மன்னார்குடி மன்னார்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தோழர் பி.சந்திர சேகரன், ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை கட்சி அலுவல கத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய் யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.