districts

img

தோழர் டி.பன்னீர்செல்வம் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்

மன்னார்குடி, பிப்.23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றிய குழு வின்  முன்னாள் செயலாளர் தோழர் டி.பன்னீர்  செல்வத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்  தலையாமங்கலத்தில் கடைபிடிக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு மாவட்டக் குழு உறுப்பினர்  ஆறு பிரகாஷ் தலைமை வகித்தார். தோழர் டி. பன்னீர்செல்வம் உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.  மன்னார்குடி நகரக் குழு செயலாளர் ஜி.தாயுமானவன், உறுப்பினர் ஏ.பி.தனுஷ் கோடி, ஒன்றியக் குழு உறுப்பினர் காசி நாதன், விவசாயிகள் சங்க செயலாளர் ஜி. முத்துகிருஷ்ணன், பொருளாளர் ஜி.மாரி முத்து, சிஐடியு டி.ஜெகதீசன், மூத்த தோழர்  கே.பொன்னுசாமி, கிளைச் செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.  முன்னதாக கட்சிக் கொடியை தோழர்  பன்னீர்செல்வம் வீட்டிற்கு முன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஏற்றி வைத்தார்.