districts

img

தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவு

புதுக்கோட்டை, ஆக.8 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்குவங்க முன்னாள் முத லமைச்சருமான தோழர் புத்ததேவ் பட்டார்ச்சார்யா மறைவையொட்டி புதுக் கோட்டையில் வியாழக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை தலைமை வகித்து புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். மூத்த தோழர் மு.அசோகன்  உரை யாற்றினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்பு மணவாளன், சு.மதியழகன், துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சலோமி, டி.லட்சாதிபதி, எஸ்.கலைச் செல்வன், ஆர்.சோலையப்பன், பி.சுசிலா, கி.ஜெயபாலன், எஸ்.பாண்டிச்செல்வி, துரை.அரிபாஸ்கர், ஆர்.மகாதீர் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.