districts

img

தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் கடைப்பிடிப்பு

தஞ்சாவூர், டிச.17- சுதந்திர போராட்ட வீரரும், பெண் ணுரிமை போராளியும், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தா பன தலைவர்களில் ஒருவருமான மறைந்த தோழர் பாப்பா உமாநாத்தின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயி றன்று கடைப்பிடிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டக் குழு அலுவல கத்தில், தஞ்சை மாநகரக் குழு சார்பில் தோழர் பாப்பா உமாநாத், உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், செயற்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், மாவட்டக் குழு, மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் மாதர் சங்கத்தின் கும்பகோணம் நகர 15-வது வார்டு கிளை சார்பில்  தோழர் பாப்பா உமாநாத் உருவப்படத் திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாதர் சங்க கும்பகோணம் மாநகரச் செய லாளர் எஸ்.சுமதி, மாநகரக் குழு உறுப்பி னர்கள் ஏ.ஜோதி, ஆர்.மணிமேகலை, கிளைச் செயலாளர் கே.ரத்தினகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.