districts

img

தோழர் அ.பழனிச்சாமி எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், செப்.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தோழரும், திருப் பூர் மேற்கு பகுதியில் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்கியவரு மான அன்புத் தோழர் அ.ப. என்ற அ.பழனிச்சாமியின் எட்டாம்  ஆண்டு  நினைவுநாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்திற்கு திங்களன்று காலை 9 மணிக்கு இடுவாய் கட்சி அலு வலகத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இடுவாய் வடக்கு கிளைச் செயலாளர் கருப்புசாமி தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர், இடுவாய் ஊராட்சி மன்ற  தலைவர் க.கணேசன், கட்சியின் மூத்த தோழர் கே.ஈஸ்வரன்,  கிளைச் செயலாளர்கள் பி.ரத்தினசாமி, ஈ.ராஜேஷ், ராம மூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் சிந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் தினேஷ் மற்றும் அ.ப. பாலசுப்பிரமணியம், அ.ப.குமார் உள்ளிட்ட அ.ப. குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் முன்னணி ஊழியர் களும் திரளாக கலந்து கொண்டனர். தோழர் அ.ப.வின் கட்சி  பணிகள் குறித்து ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி நினைவு கூர்ந்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி பகுதிகளில் கட்சி  கிளைகளால் சேர்க்கப்பட்ட செம்மலர் ஆண்டு சந்தா 40, மார்க்சிஸ்ட் ஆண்டு சந்தா 40 என மொத்தம் 80  பிரதிகளுக்கு  உண்டான சந்தா  தொகை  ரூ.17,200 /- கட்சியின் ஒன்றியச்  செயலாளர் சி.மூர்த்தியிடம் வழங்கப்பட்டது.