districts

திருச்சி முக்கிய செய்திகள்

உழவர் சந்தையில் ஆய்வு

அரியலூர், டிச.22- அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் உழ வர் சந்தைகளில் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத் துறையின்கீழ் அரிய லூர் மாவட்டத்தில் இரண்டு உழவர் சந்தை கள் செயல்பட்டு வரு கின்றன. இந்த உழவர்  சந்தைகளில் சென்னை வேளாண் வணிக இயக் குநரகம், வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) நிர்மலா ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின் போது, விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களி டம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். 

சம்பா பயிரில் பூச்சித் தாக்குதல்

பாபநாசம், டிச.22- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய் யம்பேட்டையை அடுத்த  மணலூர், கணபதி அக்ர ஹாரம், பட்டுக்குடி, கூட லூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் விளைந்துள்ள இளம் சம்பா நெற்பயிரில் செம் பட்டையான் மற்றும்  குருத்துப் பூச்சி தாக்கு தல் ஏற்பட்டுள்ளது. இத னால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு, நஷ் டத்தை சந்திக்க நேரி டுமோ என விவசாயி கள் கவலையடைந்துள் ளனர்.  விட்டு விட்டு பெய்து வரும் மழையால் இது  போன்ற நிலை ஏற்பட்டுள் ளது. கொள்ளிடக் கரை யோரமுள்ள பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடி காடு உள்ளிட்ட பகுதி களில் உள்ள வயல்களில்  இந்த பாதிப்பு ஏற்பட் டுள்ளது. தனியார் உர விற்பனை கடைகளில் விற்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் தரமற்றதாக உள்ளன.  அவை அதிக விலைக்கும் விற்கப்படுகின்றன. உட னடியாக அரசு இதில்  உரிய கவனம் செலுத்த  வேண்டும் என விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களுடன்  முதல்வர் முகாம்

பாபநாசம், டிச.22 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மக்களு டன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஊராட் சிக் குழு துணைத்  தலைவர் முத்துச்செல் வன் தொடங்கி வைத் தார். பாபநாசம் ஊராட்சி  ஒன்றியக் குழுத் தலை வர் சுமதி, பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, பாப நாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 516 மனுக் கள் வரப்பெற்றன.

மின் பணியாளர்களுக்கு கணினி தமிழ் பயிற்சி

மன்னார்குடி, டிச.22 - தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி மின்வாரிய பணியாளர்களுக்கு கணினி தமிழ் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் செ.கனகலட்சுமி தலைமை வகித்து  துவக்கி வைத்தார்  மன்னார்குடி மின்வாரிய செயற்பொறியாளர் பி.மணி மாறன் முன்னிலை வகித்தார். நகர உதவி செயற்பொறி யாளர் முனைவர் சா.சம்பத், தமிழ் மொழியின் சிறப்பை யும், கணினியில் தமிழை எப்படி பயன்படுத்துவது என்பது  குறித்தும் விளக்கினார். கூடுதல் கருவூல அலுவலர் கி. மூர்த்தி, பணியாளர்களுக்கு கணினித் தமிழின் அவசியம் குறித்து பேசினார். பயிற்சியில் பொறியாளர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளியில் கணித தின விழா

அரியலூர், டிச.22- கணிதமேதை ராமா னுஜம் பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டம், சிறுவ ளூர் அரசு உயர்நிலைப் பள்ளி யில் வெள்ளிக்கிழமை தேசிய  கணித தின விழா நடைபெற் றது. இதில் அரியலூர் கல்வி  மாவட்ட அலுவலர் ஜெயா மற்றும் பெங்களூர் மென்பொ ருள் பொறியாளர் குமரேசன் சிறப்புரையாற்றினர். பள்ளியின் தலைமை ஆசி ரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சித் தலை வர் பழனியம்மாள், பெற் றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் மணி கண்டன், ஜோதிவேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 

குறுக்கே வந்த மாடு மோதல் பைக்கிலிருந்து தவறி விழுந்த காவலர் பலி

தஞ்சாவூர், டிச.22 –  இருசக்கர வாகனத்தில் சென்ற காவல்துறை சிறப்பு  உதவி ஆய்வாளர், சாலை யில் குறுக்கே வந்த மாடு மீது  மோதியதில் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே பவன மங்கலம் பகுதியைச் சேர்ந்த வர் செந்தில்குமார் (58).  இவர் தோகூர் காவல்நிலை யத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த  டிச.19 அன்று இரவு செந்தில்குமார் பணி முடிந்து  வீட்டுக்குச் சென்றுக் கொண் டிருந்தார். அப்போது விண்ணமங்க லத்தில் சென்று கொண் டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே மாடு  ஒன்று ஓடியது. இதில் நிலை  தடுமாறி, இருசக்கர வாக னத்தில் இருந்து செந்தில் குமார் தவறி கீழே விழுந்த தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள், செந்தில்குமாரை மீட்டு பூதலூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்துக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு அவ ருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சா வூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக் கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை செந்தில்குமார் உயிரி ழந்தார். இவருக்கு ராஜேஸ் வரி என்ற மனைவியும், 2  மகன்கள், ஒரு மகள் உள்ள னர். இதுகுறித்து திருக்காட் டுப்பள்ளி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சாலையில் சுற்றித் திரி யும் மாடுகளால், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இது வரை நான்கு பேர் உயிரி ழந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

போலி பாஸ்போர்ட் வழக்கில் மேலும் 2 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, டிச.22- போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரு கேயுள்ள தனியார் விடுதியில், இலங்கை யைச் சேர்ந்த நபர்களுக்கு போலி ஆவ ணங்களைக் கொண்டு இந்திய பாஸ்போர்ட்  எடுத்த தரும் கும்பல் தங்கியிருப்பதாகவும், அவ்வாறு முறைகேடாக பாஸ்போர்ட் பெற்ற  நபர்கள் வெளிநாடு செல்ல விருப்பதாகவும் திருச்சி மாநகர கண்டோன்மென்ட் போலீசா ருக்கு நவ.28 அன்று தகவல் கிடைத்தது.  அதன்பேரில் கண்டோன்மென்ட் காவல்  நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமை யிலான போலீசார், குறிப்பிட்ட அந்த விடுதிக்கு  சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச்  சேர்ந்த சாதுசன் (24) என்பவர் அங்கு தங்கி யிருந்தது தெரியவந்தது. அவரிடம் மேற் கொண்ட விசாரணையில்,  அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  இலங்கையில் இருந்து அந்நாட்டு பாஸ்போர்ட்  மூலம் தமிழகம் வந்ததும், பின்னர் போலி யான ஆவணங்களைக் கொண்டு திருச்சி யில் புதிதாக பெறப்பட்ட இந்திய பாஸ்போர்ட்  மூலம், திருச்சியிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சாதுசன் மற்றும் அவ ருக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த முக வர் ஜோயல்புகழேந்தி ஆகிய இருவரை  போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து முறைகேடாகப் பெறப்பட்ட பாஸ் போர்ட்கள், போலி ஆவணங்கள் மற்றும் முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசார ணை மேற்கொண்டனர். மேலும் கியூ பிரிவு  போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில்  தொடர்புடைய திருச்சி பொன்மலைப்பட்டி யைச் சேர்ந்த சாமி என்கிற வைத்தியநாதன் (51), காரைக்குடியைச் சேர்ந்த (தற்போது பெங்களூருவில் வசித்து வந்த) சேவியர் (47)  ஆகிய இருவரையும் போலீசார் புதன்கிழமை  பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இதே முறையில், சுகந்தினி, நதுசன்,  சதிஷ் ஆகிய மூவரும் போலி ஆவணங்கள்  மூலம் பாஸ்போர்ட் பெற்றது உறுதியானது.  இதைத் தொடர்ந்து, வைத்தியநாதன், சேவியர் இருவரையும் போலீசார் வியாழக் கிழமை கைது செய்து சிறையில் அடைத்த னர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும்  3 பேரை தேடி வருகின்றனர்.

328 ஊராட்சிகளுக்கு இணைய வசதி: புதுகை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை, டிச.22 - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சி களில் 328 கிராம ஊராட்சிகளுக்கு இணைய வசதி வழங்கிட  தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை 85 சதவீதம் மின் கம்பங்கள் மூலமாகவும், 15 சத வீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகின்றன. இது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளில் 328 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்திற்கான உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை  மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வரு கின்றன. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறை யானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி  இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே இக்கண்ணாடி இழையை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங் கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக் கூடாது.  மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும்  மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை  செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது” என்றார்.

எருமைப் பாலில்  கேசரி பவுடர் கலப்பு 40 லிட்டர் பால் பறிமுதல்

தஞ்சாவூர், டிச.22 - எருமைப் பாலை பசும் பால் போல் காட்டுவதற்காக, ரசாயனப் பவுடரை கலந்த பால் வியாபாரியை பொது மக்கள் பிடித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி களிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த 40 லிட்டர் பால்  பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதி வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதி யைச் சேர்ந்தவர் பால் வியாபாரி தங்கவேல். இவர் பாலில்  பவுடர் ஒன்றை கலந்துள்ளார். இதை பார்த்த கரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா சிராஜ் என்பவர், காவல்துறை யினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.  மேலும் இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ராவுக்கு காவல்துறையினர் தகவல்  அளித்தனர். அவரது உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை  உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் வேல்முருகன் சுமார்  40 லிட்டர் பாலை பறிமுதல் செய்து அழித்தார்.  இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா கூறுகையில், “எருமை மாட்டுப் பால்  வெள்ளை நிறத்தில் இருக்கும். பசு மாட்டுப் பால் சற்று  இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்காக எருமைப்  பாலை வாங்கி வந்த தங்கவேல், கேசரி பவுடரை சிறிது  கலந்து இளம் மஞ்சள் நிறத்திற்கு கொண்டு வர முயன்றுள் ளார். இருப்பினும் அந்தப் பால், மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

திருச்சி விமான நிலையத்தில் 306 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, டிச.22 - திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணியை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் வயிற்றில் 20 ஓவல் வடிவ பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் மருத்துவர்கள் உதவியுடன், அவர் உடலில் இருந்த 20 பாக்கெட்டுகளை பிரித்து சோதனை செய்தனர். அதில், ரூ.19.17 லட்சம் மதிப்புள்ள 306 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர், நீதிபதிகள் உத்தரவுப்படி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் குறித்து திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு:  மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

திருச்சிராப்பள்ளி, டிச.22 - ஆவின் பணி நியமனத்தில் நடந்த முறை கேடு குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீ சார் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஆவின்  நிறுவனம் (கூட்டுறவு பால் பண்ணை) அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு பால்  உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்கு என  கடந்த 2020-21 காலக் கட்டத்தில் பணியா ளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மேலாளர், துணை மேலாளர், விரி வாக்க அலுவலர், இளநிலை செயலாளர், ஓட்டுநர், முதுநிலை தொழிற்சாலை உதவியா ளர், டெக்னீசியன் என 43 காலிப் பணியி டங்களுக்கு நேரடி தேர்வு மூலம் பணியா ளர்கள் தேர்வு செய்து நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணியிடங்கள் நியமனத்தில் முறை கேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின்பே ரில், 43 பணியிடங்களின் பணி ஆணைகளை யும், சென்னை பால் உற்பத்தி மற்றும்  பால்வள மேம்பாட்டுத் துறை ஆணையர்  உத்தரவின்பேரில், அப்போதைய ஆவின்  பொதுமேலாளர் பெருமாள் ரத்து செய்தார். இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட 43 பேரும்  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டது.  மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவின் பேரில், 13.10.2023 அன்று உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘பணிநீக்கம் செய்யப்பட்ட பணியா ளர்களை மீண்டும் பணியில் நியமிக்கவும், பணி நியமனங்களில் முறைகேடு நடை பெற்றுள்ளதா என்பது குறித்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும்’ எனவும்  உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, நேரடி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் தேர்வுக்கு  பயன்படுத்திய ஓஎம்ஆர் ஷீட் காணாமல் போனதை கண்டுபிடித்து தரக் கோரி திருச்சி  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் முத்துமாரி, திருச்சி  மாநகர காவல் ஆணையர் என்.காமினி யிடம் புதன்கிழமை புகார் அளித்தார்.  இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டதையடுத்து, திருச்சி  மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்  பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.