எழுத்துத் தேர்வில் முறைகேடு: தலைமைக் காவலருக்கு கட்டாய ஓய்வு
தஞ்சாவூர், நவ.24 - உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட கபிஸ்தலம் காவல் நிலைய தலைமைக் காவ லருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலை யத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார் (36). இவர் திருச்சியில் 2023, ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெற்ற உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வில் பங்கேற்றார். அப்போது கைப்பேசியை மறைத்து வைத்து தேர்வு அறைக்குள் எடுத்துச் சென்றார். மேலும் வினாத்தா ளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு கைப்பேசி மூலம் இணையதளத்தை பார்த்து பதில் அளித்தார். இதைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர் பார்த்து உயர் அலு வலர்களுக்கு புகார் செய்தார். இதையடுத்து, சதீஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். பின்னர் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் பணி புரிந்த இவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சதீஷ்குமாருக்கு கட்டாய ஓய்வு வழங்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
10 வருடங்களுக்குப் பிறகு திருச்சி நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள், வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்வு
திருச்சிராப்பள்ளி, நவ,24- புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டத் தில் 10 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் பென்ஜ் அண்ட் பார் மீட்டிங் ( நீதிபதிகள், வழக்கறிஞரின் கருத்துகளை கேட்கும் நிகழ்ச்சி ) திங்கட்கிழமை மதியம் 1 மணியள வில் புதிய கட்டிட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை நேரில் வந்து கூறலாம். அல்லது தலைவரிடம் கூறினால், அவர் நமது தேவைகளை அங்கு நேரில் சென்று எடுத்துரைப்பார். வழக்கறிஞர்கள் கட்டாயம் தங்கள் சீருடையில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம். பார் கவுன்சில் அடை யாள அட்டையை கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ் செயலாளர் பி.வி.வெங்கட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி, நவ.24- திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.30 ஆம் தேதி (சனிக்கிழமை) திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப பயில கத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடை பெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்ப னைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 100 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ள னர். மேலும், மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவ னங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகு திகளையுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடு நர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய வற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவல கத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
நவ.29-இல் பருப்பு மில்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, நவ.24- திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலை வர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் நாடு முழு வதும் உள்ள வணிக நிறுவன கட்டடங்களின் மீது விதித் துள்ள, 18 சதவிகிதம் ஜி.எஸ். டி. வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நவ.29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பருப்பு மில்கள் அனைத்தும் ஒருநாள் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். நம் கண்டனத்தை மத்திய மற்றும் மாநில அரசு களின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக நாம் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை மில்களை முழு வதும் அடைத்து முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடு மாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாபநாசம்: ஏடிசி முகாம்
பாபநாசம், நவ.25- பாண்டிச்சேரி லாஸ்பெட் என்.சி.சி குரூப் ஹெட் குவார்ட்டர்ஸில் 7.11.24 முதல் 16.11.24 வரை ஏடிசி முகாம் நடந்தது. இதில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி டிரூப் 39 நேவி மாணவர்கள் 42 பேர் என்.சி.சி அலுவ லர் சரவணன் உடன் கலந்து கொண்டு பயிற்சியை முடித்த னர். இதில் சிறப்பாக செயல்பட்ட வீரமணிகண்டன், ராகுல் ஆகிய மாணவர்களுக்கு, கமாண்டிங் ஆபிஸர் பரிசு வழங்கினார். பயிற்சியை முடித்து வந்த மாண வர்களை பள்ளி தலைமைசிரியர் மணியரசன் உட்பட ஆசி ரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.
நவ.28-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்
பெரம்பலூர், நவ.24- பெரம்பலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நவ.28 ஆம் தேதி டாக்டர்.எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்துகொள்ள வருபவர்கள் போட்டி அன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், (முதலிடத்தில் வெற்றி பெற்றவர்களை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிட ஆளறி அட்டை வழங்கிடும் நோக்கத்திற்காக) ஒரு பாஸ்போர்ட் சைஸ் அளவிலான புகைப்படம், தொலைபேசி எண், பள்ளியின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெருந்தரக்குடி ஊராட்சியை திருவாரூர் நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவாரூர், நவ.24- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள பெருந்தரக்குடி ஊராட்சி கிராமத்தை, திருவாரூர் நகராட்சி யில் இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி சிபிஎம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கொரடாச்சேரி ஒன்றியம், பெருந்த ரக்குடி ஊராட்சியில் உள்ள எட்டு கிராமங்க ளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அதனை திருவாரூர் நகராட்சி யில் இணைக்க உள்ளதாக தெரிகிறது. நகராட்சியில் இணைப்பதால் எங்கள் கிராம மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. எங்களின் கிராமப்புற வாழ்வாதாரமும் பாதிக்கும். ஆகவே பெருந்தரக்குடி ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் என இணைக்க வேண்டாம் என்ற பொது மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை யில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சி யர், ஆய்வு செய்வதாக உறுதியளித்தார். ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது கொரடாச்சேரி சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.கோபிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.எஸ். ஜெய்கிஷ், குளிக்கரை கிளைச் செயலாளர்கள் எம்.தங்கவேலு, ஜி.குமர வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், இதே கோரிக்கையை வலியு றுத்தி சனிக்கிழமையன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பெருந்தரக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது.
ஆராய்ச்சிகள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
திருச்சிராப்பள்ளி, நவ.24- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக கல்வியியல் சார்பில் நுாலக வார விழா மற்றும் பயிற்சிப் பட்டறை நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய தாவது:- ஆக்கபூர்வமாகவும், முழு முயற்சியு டன் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும். இதுபோன்ற ஆராய்ச்சி உத்திகள், தொழில்நுணுக்க மேம்பாடுகள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும். ஆராய்ச்சி யில் ஈடுபடுவர்கள் தங்கள் சொந்த முயற்சி யில் தரவுகளை உருவாக்க வேண்டும். பயிற்சி பட்டறை மூலமாக தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான ஆராய்ச்சி தரவுகள் அனைத்து மாணவர்களும் அணு கும் வகையில் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு சிறிய கருவி, எனவே அதனை அதிக அளவில் சார்ந்தி ருக்க கூடாது. மனித நுண்ணறிவே அனைத்தி லும் மேம்பட்டது என்றார். நிறைவு விழா வில் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட வர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் காளிதாசன் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தியாகராசர் கல்வியியல் கல்லுாரி தலைமை நுாலகர் சுந்தர் வினாடி வினா நடத்தினார். நிகழ்ச்சியில் நுால கர் மற்றும் முதுநிலை பேராசிரியர் சீனிவாச ராகவன் உட்பட பலர் பேசினர். பேராசிரியர் அரங்கநாதன் நன்றி கூறினார்.
தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
கரூர், நவ.22 - சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறு வோருக்கு ரூ.5,00,000/- விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படு கிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார். 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வர வேற்கப்படுகின்றன. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையோர் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம். விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவ ணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2024 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சிய ருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.12.2024 என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
புகையிலைப் பொருள் விற்ற கடைகளுக்கு அபராதம்
தஞ்சாவூர், நவ.23 - பேராவூரணியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த மற்றும் பதுக்கி வைத்தி ருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேராவூரணி கடைவீதியில் சின்னையா என்பவரது பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப் பட்ட 100 கிராம் கூல் லிப் எனப்படும் புகையிலைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், காவல்துறை யினருடன் இணைந்து நடத்திய சோதனையில், சேது பாவாசத்திரம் கடைவீதியில், அசல் மளிகை என்ற பெயரில் கடை நடத்தி வரும் இப்ராம்ஷா என்பவருக்குச் சொந்தமான குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பான் பராக் புகையிலைப் பொருள் 9 கிலோ பறிமுதல் செய்யப் பட்டது. இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, கடைகள் 15 நாட்களுக்கு தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டன. இப்ராம்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்ணை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை
அருப்புக்கோட்டை, நவ.23- அருப்புக்கோட்டையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அருப்புக்கோட்டையில் உள்ள பெரியபுளியம்பட்டி யைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள்(48). அதே பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை. இவர் பாண்டியம்மாளை கட்டை யால் தாக்கியதோடு கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, அருப்புக் கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டித்துரை யை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டு கள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
விருதுநகர் அருகே கிடந்த 2 நாள் பெண் குழந்தை சிறுமியை ஏமாற்றிய பேராசிரியர் கைது
விருதுநகர், நவ.23- விருதுநகர் அருகே பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை மீட்கப்பட்டது. இந்த வழக்கில் சிறுமியை ஏமாற்றி கர்ப்ப மாக்கிய பேராசிரியர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த நவம்பர் 15 அன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி யினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து, விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது இந்தநிலையில், அக்குழந்தை யாருடையது என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், குழந்தையின் தாய் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி எனவும், திருமணமாகாமல் குழந்தை யை பெற்றெடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, அச்சிறுமி யிடம் விருதுநகர் மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில், ஆமத்தூரைச் சேர்ந்தவர் விவேக் (35) என்ப தும், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரிபவர் எனவும், இவருக்கு திரு மணமாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. இவர், அச்சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதும் விசார ணையில் தெரியவந்தது. எனவே, விவேக் மீது விருது நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு, திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக மின்வாரியத்தில் அதானி ஒப்பந்தம் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுக!
தேனியில் பெ.சண்முகம் பேச்சு தேனி, நவ.24- தமிழக மின்வாரியத்தில் அதானி செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறியுள்ளார். கட்சியின் தேனி மாவட்ட 9 வது மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பெ. சண்முகம் மேலும் பேசியதாவது: பிரதமரின் நெருங்கிய கூட்டாளியான அதானி அமெரிக்காவில் செய்த ஊழ லுக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித் துள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் வெளிநாட்டு முதலீட்டை பெறுவதற்கு வெளிநாடு சென்றார். அப்போது அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக செய்தி வருகிறது. அந்த ஊழல் மலிந்த அதானி நிறுவ னத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். நாட்டில் நிலவும் வேலையின்மை, வறுமை நிலையை திசை திருப்ப பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற திட்டங்களை கொண்டு வருகிறது. பாஜக அரசு சிறுபான்மை மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அசாம் மாநிலத்தில் சிறுபான்மையினர் நிலம் வாங்கினால் முதல்வரிடம் தடை யில்லா சான்று பெற வேண்டும். விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மதமறுப்பு திருமணம் செல்லாது என்கிறது அம்மாநில பாஜக அரசு. இவ்வாறு சிறுபான்மை மக்க ளின் மீது வெறுப்புடன் நடந்து கொள்கி றது. இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.