திருச்சிராப்பள்ளி, ஜூன் 15-
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 11, 12-ஆம் வகுப்பு கள் பயிலும் மாணவ, மாண வியர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கள் ஜூன் 26 அன்று திருச்சி ராப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், இதற்கான படிவத்தை நிறைவு செய்து அவரவர் பயிலும் பள்ளியின் தலைமையாசிரி யரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நரிடம் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலி ருந்து கவிதை, கட்டுரை, பேச் சுப் போட்டிகளில் ஒவ்வொ ருப் போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாண வர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டி களுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக் கும் முதல்பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வீதம் மொத்தப் பரிசுத் தொகை யாக ரூ.66 ஆயிரம் காசோ லையாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.