districts

பண்ணையார்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் எதிராக போராடியவர்கள் கம்யூனிஸ்ட்கள்

தஞ்சாவூர், மே 5-  

     பண்ணையார்களுக்கும் ஜமீன்தார்க ளுக்கும் எதிராக போராடியவர்கள் கம்யூனிஸ்ட் கள் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற தியாகிகள் ஆவணப்படம் வெளியீட்டு விழாவில் கூறினார்.

     விழாவில், தஞ்சை மாவட்ட தியாகிகள் வரலாறு குறித்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், ‘‘இது ஆவணப்படம் வெளியீட்டு விழா மட்டும் அல்ல. மே தினம், காரல் மார்க்ஸ் பிறந்த தினம், ஆவணப்படம் வெளியீடு என முப்பெரும் விழாவாக நடை பெற்று வருகிறது.  

     சிகாகோவில் தொழிலாளர்கள் 8 மணி நேர  வேலை உரிமையை போராடி பெற்றனர். அவர்களை நினைவு கூரும் தினம் தான் மே தினம், போராடிப் பெற்ற உரிமைகளை முடக்க முதலாளிகள், கார்ப்பரேட்டுகள், ஆளும் வர்க்கங்கள் நினைப்பது ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்து வரும் வரலாறு.  

    அவற்றையெல்லாம் தகர்த்து எறிந்து வருவது தான் தொழிலாளி வர்க்கம். வகுப்பு வாதத்திற்கு எதிராக முற்போக்கு தொழிற்சங் கங்கள், தொழிலாளிகளை ஒருங்கிணைத்து வரு கிறது. ஒருவருக்கொருவர் மதம், சாதியின் பெய ரால் மோதிக்கொள்ளச் செய்யும் வேலைகளை பாசிச சக்திகள் சத்தமில்லாமல் செய்து வரு கிறது. தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றி, சுருக்கி தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படு கின்றனர்.  

   தமிழகத்திலும் இதுபோல 12 மணி நேர வேலை சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு கடும் எதிர்ப்பால் அந்தச் சட்டம் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, அதனை  வரவேற்கிறோம். மார்க்சியம் வறட்டு சூத்திரம் அல்ல, அது வளர்ந்து கொண்டே இருக்கும். எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் அடிப்படை மார்க்சியம், அழிக்க முடியாத தத்துவம்’’ என்றார்.  

   மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அடக்குமுறைக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்திப் போராடிய தியாகிகள் வர லாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத் தக்கது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வர லாறு அவர்களை புகழும் வகையில் எழுதப் பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஆட்சியில் மக்கள், விவசாயிகள் எவ்வாறு கொடு மைப் படுத்தப்பட்டனர் என்ற வரலாறு ஆவ ணப்படுத்தப் படவில்லை. மன்னர்களின் ஆதிக்க வெறி, மண்ணாசை, பொன்னாசை யால், போரில் பல ஆயிரம் குடிமக்கள் பலி கொடுக்கப்பட்டனர். விவசாயிகள் மன்னர்களை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் பதிவு செய்யப் படவில்லை.

    பின்னர் வந்த பிரிட்டிஷ் ஆட்சியிலும் கூட  தேயிலை, காப்பித் தோட்டங்களில் கொத்தடி மைகளாக மாற்றப்பட்டனர். மன்னர் ஆட்சிக்கு பிறகும், பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் அடிமைப் படுத்தப்பட்டனர்.  

  விடுதலைக்கு பிறகு பண்ணையார்க ளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும், ஜமீன்தாரர்க ளும் பொதுமக்களை அடக்கி ஒடுக்கிய போது அவர்களுக்கு எதிரான மகத்தான போராட்டங்க ளை நடத்தி தலைமை தாங்கி அவர்கள் கம்யூனிஸ்டுகள்.  

\  அமைதியாக உள்ள கேரளத்தில் மத வெறியை புகுத்தி சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சி செய்கின்றனர். இந்த தேசத்தை காக்க, மதவெறியை ஒழிக்க வேண்டிய கட்டா யத்தில் உள்ளோம். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை அகற்றுவதன் மூலம் தான், ஒற்றைக் கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கும், மாநில உரிமைகளை பறிக்கும், மக்களை ஒடுக்கும் நிலையில் இருந்து நம்மை  தற்காத்துக் கொள்ள முடியும். அதற்காக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கி றோம். மகத்தான தேர்தல் போராட்டத்தில் பாஜகவை அகற்ற வேண்டிய சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ள மு.க.ஸ்டாலினோடு இணைந்து, தமிழகத்தி லும், இந்தியாவிலிருந்தும் அதை அகற்ற வேண்டும் என இணைந்து செயல்பட விரும்பு கிறோம். தமிழகத்திலே திமுக ஆளுமை கட்சி யாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களோடு சில கருத்துகளிலே வேறுபட வேண்டி இருக்கி றது. தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.  

   அந்த அடிப்படையில் தான் தொழிற்சாலை திருத்தச் சட்டத்தை நாம் கடுமையாக எதிர்த் தோம். சட்டமன்றத்திலும் குரல் கொடுத்தோம். முதலமைச்சரிடம் நேரடியாக முறையிட்டோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய, தோழமைக் கட்சியினுடைய கோரிக்கை ஏற்று மக்கள் விரும்பாத சட்டத்தை திரும்பப் பெற்றார். அதற்காக முதலமைச்சர் அதற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். அதில் சில சர்ச்சைகள் வந்திருக்கலாம். கூட்டணிக் கட்சி என்றால் கருத்து வேறுபாடு வரக்கூடாது என்பதல்ல.  

   பாஜகவை அகற்ற வேண்டும் என்ற நோக் கத்திற்காக செயல்படுகிறோம். அதற்காக அனைத்து விஷயத்திலும் ஒத்துப் போக முடியும் என்று சொல்ல முடியாது. வேறுபாடுகள் இருக்க லாம், மாறுபாடுகள் இருக்கலாம், ஆனால், அடிப்படை நோக்கத்திற்கு விரோதமாக செயல் பாடுகள் இருக்கக்கூடாது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இன்று (வெள்ளிக்கிழமை) கூட முரசொலி பத்திரிகையில் நடந்தது நடந்த வையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவை யாக இருக்கட்டும் என்று எழுதி உள்ளனர். இடையில் ஏற்பட்ட சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதமாக அவர்களே எழுதியுள்ளனர். அதை வரவேற்கிறோம்.

    ஒரு பத்திரிகையிலே (தினமலர்) வார்த்தை போர் நடக்கிறது என்று எழுதி உள்ளனர். பெரி தாக ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்தார் கள். ஆனால் நடக்கவில்லை என அவர்களுக்கு வருத்தம். இது இன்றைக்கு மட்டுமல்ல, என் றைக்கும் பகுத்தறியும் பண்புள்ள கூட்டணி என்றே சொல்வோம். மாறுபாடுகளை வேறுபாடு களை ஒருவருக்கொருவர் விவாதிப்போம். எந்த சூழ்நிலையிலும் பாஜகவை தமிழகத்தில் நுழைய விடக்கூடிய எந்த ஒரு செயலையும் அனுமதிக்க மாட்டோம். அதுபோல் எந்த ஒரு சூழ்நிலையும் இந்த கூட்டணியில் நடந்து விடாது. மற்றவர்களின் கனவு ஒருபோதும் நடந்து விடாது’’ என பேசினார்.