பாபநாசம், ஏப்.30-
வகுப்புவாத, பாசிச சக்திகளை அதிகாரத் திலிருந்து வெளியேற்றவும் உறுதி ஏற்போம் என எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மேதின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக் கையில், ‘‘உழைப்பாளிகளின் பெரு மையை, உலகெங்கும் உரைத்திடும் உயரி யத் திருநாள் இந்த மேதினம். உழைப்புக் கேற்ற ஊதியமின்மை, கொத்தடிமைத் தன மான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக உலக அரங்கில் உரிமைகளை உறுதிசெய்த நாள் மே 1. உழைப்பவர் வியர்வை உலரும் முன்பே அவர் தம் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றார் நபிகள்.
மனிதக்குல வரலாற்றில் தொழிலா ளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்கு முறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள். இதற்கு வித்திட்ட சிங்காரவேலரையும் மே நன்னா ளில் நினைவு கொள்வோம்.
உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்று மையைப் பறைசாற்றும் இந்நாளில் வகுப்பு வாத, பாசிச சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் உறுதி ஏற்போம். தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.