மின்னணு இயந்திரங்களில் வாக்குச் சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்
தஞ்சாவூர், ஏப்.10- தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச் சீட்டு பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மேலாண் (இ.வி. எம்.எஸ். 2.0) என்ற மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் சட்டப் பேரவை வாரியாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவிடை மருதூர் தொகுதிக்கு தலா 351 மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரங்களும், கட்டுப்பாட்டுக் கருவி களும், 380 வாக்காளர் சரி பார்க்கும் காகித தணிக்கை இயந்தி ரங்களும், கும்பகோணம் தொகு திக்கு தலா 346 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட் டுக் கருவிகளும், 375 வாக்காளர் சரி பார்க்கும் காகித தணிக்கை இயந்தி ரங்களும், பாபநாசம் தொகுதிக்கு தலா 361 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 391 வாக்காளர் சரி பார்க்கும் காகித தணிக்கை இயந்தி ரங்களும், திருவையாறு தொகுதிக்கு தலா 376 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 408 வாக்காளர் சரிபார்க் கும் காகித தணிக்கை இயந்தி ரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல, தஞ்சாவூர் தொகு திக்கு தலா 350 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப் பாட்டுக் கருவிகளும், 379 வாக்கா ளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும், ஒரத்தநாடு தொகு திக்கு தலா 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட் டுக் கருவிகளும், 373 வாக்காளர் சரி பார்க்கும் காகித தணிக்கை இயந்தி ரங்களும், பட்டுக்கோட்டை தொகு திக்கு தலா 326 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப் பாட்டுக் கருவிகளும், 353 வாக்கா ளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும், பேராவூரணி தொகுதிக்கு தலா 312 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 338 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச் சீட்டு பொருத்தும் பணி அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி களிலுள்ள கோட்டாட்சியர், வட்டாட் சியர் அலுவலகங்களில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட் சியர், வேட்பாளர்கள், வேட்பாளர்க ளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பணி வியாழக் கிழமை (ஏப்.11) நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
இறந்து கிடந்த நரி கும்பகோணத்தில் சிறுத்தை நடமாட்டமா?: வனத்துறை ஆய்வு
கும்பகோணம், ஏப்.10- கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் அருகே திருமலை ராஜபுரம் கிராமத்தில் மல்லபுரம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. இதையடுத்து வனத்துறை, போலீ சார், தீயணைப்பு துறையினர் ஆங்காங்கே சிறுத்தையை பிடிப்பதற்கு கூண்டுகள் அமைத்து நவீன கருவிகளுடன் கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை பிடிபடாததால், இது பொய் செய்தி எனவும், இதுபோன்ற பொய் செய்திகளை பரப்பிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை, வனத்துறையினர் எச்சரித்தனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாடுவது போன்ற பழைய படங்களை வெளி யிட்ட நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென செவ்வாயன்று கும்பகோணம் அருகே உள்ள திருமலைராஜபுரம் பகுதியில் ஒரு நரி தலை துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் சிதறி கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சிறுத்தை இதை கொன்றிருக்கலாம் என சந்தேகித்து, காவல்துறையின ருக்கும் வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். அதன்படி வனத்துறை அலுவலர்கள் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்ட போது, அங்கு சிறுத்தையின் கால் தடம் போன்று இருப்பதை கண்டறிந்து, அது சிறுத்தை தானா என ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் மயிலாடு துறை பகுதியில் அச்சத்தை கிளப்பிய அந்த சிறுத்தை, இப்போது கும்பகோணம் பகுதி மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறதோ என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
அமெரிக்காவில் வேலை எனக் கூறி இளைஞரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி
தஞ்சாவூர், ஏப்.10 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரின் கைப்பேசிக்கு இன்ஸ்டா கிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வெளிநாட்டு வேலை என 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் வந்தது. மேலும், இளைஞரிடம் மர்ம நபர் பேசி அமெரிக்க வேலைவாய்ப்பு பெற விசா, பயணக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். இதை நம்பிய இளைஞர் இணையவழியில் பல்வேறு தவணைகளில் ரூ.7,93,300 செலுத்தினார். ஆனால் மர்ம நபர் கூறியபடி அமெரிக்க வேலைவாய்ப்பு பற்றி எந்தத் தகவலும் வரவில்லை. இது தொடர்பாக மர்ம நபரை இளைஞர் தொடர்பு கொள்ள முயன்றபோது, அழைப்பு களைத் துண்டித்துவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர், தஞ்சா வூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்தார். இதன்பேரில் காவல் துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
அறந்தாங்கி, ஏப்.10- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அழகு-2 திட்ட அலுவலர் முனைவர் வி.ரமேஷ் தலைமை யில் பல்வேறு பொது சேவைகள் செய்த மாணவ, மாணவி களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப் பட்டது. கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேரா.வி.பாலமுருகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணமேல்குடி வட்டாட்சியர் சேக் அப்துல்லா நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றி தழ் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்துத் துறை தலை வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் கள் கலந்து கொண்டனர்.
பைனான்ஸ் கம்பெனி வசூல் தொகை ரூ. 2.58 லட்சம் பறிமுதல்
அரியலூர், ஏப்.10- அரியலூர் சிறப்பு தாசில்தார் கோவிந்தராசு தலைமை யில், சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள், காவலர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர், அரியலூர் முட்டுவாஞ்சேரி சாலையில் அம்பலவார்கட்டளை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த, அரியலூர் வட்டம் கீழைசனை கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி 1,56,600 ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்காக வசூல் செய்து வந்துள்ளதாக கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பதால், பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, அரியலூர் கோட்டாட்சிய ரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராம கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, இப்பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, செந்துறை அருகே உள்ள ராய புரம் பகுதியில் எல்என்டி பைனான்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் கருப்புசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 2ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறி முதல் செய்தனர். நிதி நிறுவனத்தின் மூலம் வழங்கப் பட்ட கடன் தொகைக்கான தவணைத் தொகையை வசூ லித்து வந்ததாக கருப்புசாமி கூறிய நிலையில், அதற்கான ஆவணத்தை காட்டாததால் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் ஒப்ப டைத்தனர். ஒரே நாளில் இரு இடங்களில் பைனான்ஸ் வசூல் தொகை 2,58,600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு
மயிலாடுதுறை, ஏப்.10- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றவுள்ள காவ லர்களுக்கு தேர்தல் ஆணை யத்தின் இணையதள மென் பொருள் செயலி வழியாக வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத் தும் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்கா ளர்கள் சிரமமின்றி வாக்க ளிக்க ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 1743 வாக்குச்சாவடிகளில் 89 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப் பட்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. இதனையொட்டி புத னன்று தேர்தல் பார்வையா ளர், காவல்துறையினர் முன்னிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள காவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணைய தள செயலி வழியாக தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டன. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட வாக்குச்சாவடி களில் பணியாற்றவுள்ள காவலர்களுக்கு வாக்குச் சாவடி வாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி, 30 உதவி காவல் ஆய்வாளர்களும், 67 காவ லர்களும், 67 தலைமை காவ லர்களும், 325 காவல் படை யினரும் வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் பணி யில் ஈடுபடுத்தப்படவுள்ள னர்.
இன்று ரமலான் பண்டிகை: ஜவாஹிருல்லா வாழ்த்து
பாபநாசம், ஏப்.10- மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவர் ஜவா ஹிருல்லா அனைவருக்கும் ரமலான் வாழ்த்து தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ஈகைப் பெருநாள் வாழ்த்துகளை அனை வருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஈகைப் பெருநாள் சமூக உறவை பலப்படுத்திட வழி வகுக்கும் திருநாளாகும். ஒரு மாதம் பசித்தி ருந்து, தாகித்திருந்து ரம லான் மாதத்தில் பெற்ற பயிற்சிகள் ஆண்டு முழு வதும் தொடர வேண்டும். ஈகைப் பெருநாளின் பிப் புலம் ஈகைமிக்க அறப்பணி கள் ஆற்றுவதில்தான் அமைந்துள்ளது. செல்வந்தர்கள், வறிய வர்கள் என்ற வேறுபாடில் லாமல் அனைத்து முஸ்லிம் களும் மனித நேயப் பணி களில் ஈடுபடுவதை இஸ்லாம் ஒரு மார்க்கக் கட மையாக்கி உள்ளதற்குச் சான் றாக திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் பல உள்ளன. எனவே புனித ரமலான் மாதத்தில் நம்மிடம் காணப்பட்ட ஈகைக் குணம் ஆண்டு முழுவதும் தொடர இந்நன்னாளில் உறுதி எடுப்போம். வெறுப்புணர்வு நெருப்பை அணைக்க, அனைவரையும் அர வணைப்போம் என இந்த நன்னாளில் உறுதி எடுப் போம்” என கூறப்பட்டு உள்ளது.