மயிலாடுதுறை, மே 19-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரும், ஒருங்கி ணைந்த தஞ்சை மாவட்ட முன்னணி தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போ ராட்ட வீரரும், குத்தாலம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தவருமான தோழர் கோ.பாரதிமோகனின் நினைவு தினம் கடைப் பிடிக்கப்பட்டது.
இதையொட்டி திருக் கடையூர் அருகேயுள்ள டி. மணல்மேட்டில் அவரது படத் திற்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு, மாவட் டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
சிறப்பு பேரவை
தரங்கம்பாடி வட்டம் டி.மணல்மேட்டில் கோ. பாரதிமோகன் நினைவு தினத்தையொட்டி நடை பெற்ற பேரவையில் கட்சி யின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயற் குழு, மாவட்டக்குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.