திருவாரூர்,ஜனவரி.6- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் விளிம்பு நிலை மக்களின் ஒப்பற்ற தலைவராக வாழ்ந்து மறைந்த தோழர் எஸ்.ஜி. முருகையனின் 46 ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி சித்தமல்லியில் உள்ள தோழரின் நினைவு இடத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், சிபிஐ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சிபிஎம் மாவட்ட செயலாளர் டி. முருகையன், செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர், உடன் சிபிஎம் கோட்டூர் ஒன்றிய செயலாளர் கே.கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு. பிரகாஷ் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முனைவர் ஜி.வெங்கடேசன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, வழக்கறிஞர் சங்கம் மாவட்டச் செயலாளர் கதாக அரசு. தாயுமாணவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.