திருவாரூர், பிப்.9 - திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜா கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர் மாணாக்கர்கள் சார்பாக, திருவாரூர் மாவட்டத்தின் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி திருவிழாவில் பட்டிமன்றம் நடைபெற்றது. கடந்த பிப்.2 அன்று துவங்கிய புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புத்தகத் திருவிழாவின் 8 ஆம் நாள் நிகழ்வில் ஸ்ரீதியாகராஜா கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர் மாணாக்கர்கள், ‘இன்றைய காலகட்டத்தில் புத்தகம் வாசித்தல் மேம்பட்டு உள்ளதா அல்லது சீர்குலைந்துள்ளதா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினர். இதற்கு நடுவராக பயிற்சி ஆசிரிய மாணவர் எம்.அருண் செயல்பட்டார். பட்டிமன்றத்தில் பங்கேற்ற பயிற்சி ஆசிரிய மாணவர்களை பாராட்டி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன் புத்தகங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும், எழுத்தாளர்கள் டாக்டர் சங்கரா சரவணன், முனைவர் இரா.காமராசு ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.