திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், அரசவெளி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடம் எடுத்தார். இந்த ஆய்வின் போது, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.