districts

img

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஆட்சியர்

தஞ்சாவூர், பிப்.8-  தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாது காப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்து, சுமார் 6.5 கி.மீ தூரத் திற்கு, ஆட்சியர் மோட்டார் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, வட்டார போக்குவரத்துத் துறை, போக்கு வரத்து காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, முன் மாதிரி சாலை யான மருத்துவக் கல்லூரி சாலையில் விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடை பெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்  தார். பிறகு, மேம்பாலம் ரவுண்டானா முதல் பிள்ளையார்பட்டி ரவுண்டானா வரை சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி மருத்து வக் கல்லூரி சாலையில் பொது மக்க ளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வினை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் சாமிநாதன், வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் நித்யா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.