அரியலூர், அக்.19 - ஆண்டிமடத்தில் பொது மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத் தின் மூலம் வழங்கப் படும் குடிநீரின் தரத்தினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டாரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி சனிக்கிழமை மேற்கொண்டார். அதில் ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள மருதூர் ஊராட்சி யில் பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் சுகா தாரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் நீரின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் கருவி மூலம் பரிசோ தனை செய்து வழங்கப்பட்ட நீர் தரமாக, சுகாதாரமாக உள்ளதா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீர் குழா யில் வரக்கூடிய குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரமான, சுத்தமான குடிநீரை பொது மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.