districts

img

திருவாரூர் மருத்துவருக்கு ஆட்சியர் பாராட்டு

மன்னார்குடி, ஜன.28 - திருவாரூர் மாவட்டம் சுகாதாரத்துறை இணை இயக்குநர் கட்டுப்பாட்டில், திருத்துறைப்பூண்டி பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி வருபவர் மருத்துவர் சி.ரஞ்சனி பிரியா. திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக, இவருக்கு 75 ஆவது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இவரது பணியை பாராட்டி சென்ற ஆண்டு குடியரசு தினத்திலும் இவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் சி.வசந்தபாரதியும், மருத்துவர் சி.ரஞ்சனி பிரியாவும் முத்துப்பேட்டை விடுதலை போராட்ட வீரர்  ரெ.நாராயணசாமி தேவரின் பேத்திகள் ஆவர். இவர்கள் இருவரும் முத்துப்பேட்டை ரஹ்மத் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.