திருவாரூர், ஜுன் 13 - திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1433ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு ஜூன் 11 முதல் 14 வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டத் திற்குரிய தேதிகளில் தினசரி காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜூன் 13 அன்று நடைபெற்ற தீர்வாயத்தில் பொது மக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு மாற்றம், அடிப்படை வசதி கள் குறித்து 101 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சிய ரிடம் வழங்கினர். தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு நத்தம் சிட்டாவிற்கான நகலும், 2 நத்தம் பட்டா மாறுதல் ஆணையும், ஒரு நபருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணையும், 4 நபர்களுக்கு பட்டா மாறுதலுக் கான ஆணையும், 6 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைக் கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.