பெரம்பலூர்,செப்.19- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பெரம்ப லூர் மாவட்டம், குன்னம் வட்டம், சிறுமத்தூர் ஊராட்சிக் குட்பட்ட முருக்கன்குடி கிரா மத்தில் ஊராட்சி மன்ற அலு வலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார. மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், மனு மீது விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள தொ டர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி யில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், வீடு வீடாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களின் கோரிக் கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.