districts

img

புதிய தொழில் முனைவோர் திட்ட பயனாளிகளுடன் ஆட்சியர் சந்திப்பு

மயிலாடுதுறை, ஆக.27 -  மயிலாடுதுறை அருகே குளிச்சார் கிராமத்தில் மாவட்ட தொழில் மையத்தின் புதிய தொழில்முனைவோர் முன்னோடிகள் திட்டம், பிரதான் மந்திரியின் உணவு வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் பயன்பெற்று, புதிய தொழில் தொடங்கிய பயனாளிகளை “நிறைந்த மனம்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து, பயனாளிகளிடம் திட்டங்களின் பயன்களை கேட்டறிந்தார். தொடர்ந்து குளிச்சார் கிராமத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம், பாரத வங்கியின் வழியாக சிவராமன் என்பவர் ரூ.50 லட்சம் மானியத்துடன்கூடிய கடனுதவி பெற்று, அமைத்துள்ள உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தினை ஆட்சியர் பார்வையிட்டு திறந்து வைத்தார்.