புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.அருணா தலைமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.