பெரம்பலூர், நவ.18- பெரம்பலூரில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க் கும் கூட்டத்தில் 306 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ், தலை மையில் மக்கள் குறைதீர்க் கம் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து அவர்க ளின் கோரிக்கை மனுக்க ளை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, பொதுமக்க ளிடமிருந்து முதியோர் உத வித்தொகை, மாற்றுத்திற னாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோரு தல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண் டார். பொதுமக்களின் கோ ரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு அலுவலர்கள் முழு அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணி யாற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், அலுவ லர்களுக்கு அறிவுறுத்தி னார். திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 306 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல் பிரபு, சமூக பாது காப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உள்ளிட்ட அனை த்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.