districts

அறந்தாங்கியில் அரசு திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

அறந்தாங்கி,பிப்.22-   தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்கள் ,சேவைகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறை களை கேட்டறிந்தார். அறந்தாங்கி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிதம்பர விடுதி தொடக்க நிலைப்பள்ளி மற்றும் குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்து வழங்கிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார்.  ஆய்வின் போது அறந்தாங்கி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஷியாமளா அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச. சிவகுமார் அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு. வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.