மயிலாடுதுறை, செப்.6 - மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனை, மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் மருந்தகம், புறநோயா ளிகள் பிரிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தொடர்ந்து புறநோ யாளிகள் பதிவு அறையில் தினசரி புறநோயாளிகள் பதிவு செய்யும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அரசு பெரியார் தலைமை மருத்து வமனை கூடுதல் கட்டடம் ரூ.45 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 1,11,559 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்து, பொதுத் தேர்விற்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள வினா-விடை கையேடு குறித்து கேட்டறிந் தார்.