திருவாரூர், ஜூலை 26 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத் தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முகாமிட்டு களஆய்வு செய்தார். மேலும், குடவாசல் அரசு மருத்துவ மனையில் உள்நோயாளி பிரிவு, வெளிநோ யாளி பிரிவு, பேறுகாலத்திற்கு பின் கவனிப்பு அறை, பெண்கள் மருத்துவ பிரிவு, ஆண்கள் மருத்துவ பிரிவு, ஆய்வகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். தொடர்ந்து, பத்மாவதி நகர் அருகில் அமைந்துள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் பூங்காவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சரியான முறையில் பரா மரிக்கப்படுகிறதா எனவும், குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் ரூ.182.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டு வரும் துணை சார் பதிவாளர் அலுவல கத்தையும், ஒகை பாலம் அருகிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். பின்பு, மஞ்சக்குடி ஊராட்சி, மூலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு ஊழியர்களிடம் உணவு தயாரிக் கும் முறை குறித்தும், மாணவ, மாணவி யர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், புதுக்குடி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்ச ரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயா ரிக்கப்படும் உணவு முறை குறித்தும், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி வகுப்பறை கட்டடத்தினையும் ஆட்சி யர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது, குடவாசல் பேரூராட்சித் தலைவர் மகாலெட்சுமி முருகேசன், வட்டாட் சியர் தேவகி, பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்களும் மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர்.