districts

img

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய ஆட்சியர்

மயிலாடுதுறை, நவ.1 -  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட  ஆட்சியர் மகாபாரதி தனது குடும்பத் துடன் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை கள் காப்பகத்தில் புத்தாடை, இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து அங்குள்ள குழந்தைக ளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். தீபாவளி பண்டிகை என்பது பெரி யவர்களை காட்டிலும் குழந்தை களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தரக் கூடிய ஒரு பண்டிகை. பொங்கல் போன்ற மற்ற பண்டிகைகள் போல இல்லாமல் தீபாவளி பண்டிகை சற்று உயர்வான பண்டிகையாகவே இருந்து வருகிறது. இதனால் செல்வந்தர்களுக்கு மகிழ்ச்சி தரும்  அளவிற்கு, நடுத்தர குடும்பத்தின ருக்கும், ஏழை-எளிய வர்க்கத்தின ருக்கும் இந்த இனிப்பு பண்டிகையா னது, சற்று கசப்பான பண்டிகை யாகவே எண்ணத் தோன்றுகிறது. அன்பாலயத்தில் ஆட்சியர்  இந்தச் சூழலில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, மகிழ்ச்சி பொங் கும் தீபாவளியாக மாற்ற பல சமூக  ஆர்வலர்களும் அன்புள்ளம் கொண்டவர்களும் தற்போது உதவிக் கரம் நீட்டி வருகின்றனர். அதன் ஒன்றாக, மயிலாடுதுறையில் உள்ள ‘அன்பாலயம்’ என்ற ஆதர வற்றோர் இல்லத்தில் உள்ள குழந் தைகளுக்கு, புத்தாடை, பட்டாசு மற்றும் பலகாரங்களை கொடுத்து, அவர்களுடன்  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். அன்பகம் காப்பகம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்கா ழியில் தட்சிணாமூர்த்தி நகரில்  அமைந்துள்ளது ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோ ருக்கான அன்பாலயம் காப்பகம். இங்கு ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தனது  மனைவி ஜனனியுடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டா டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலு வலர் செந்தில்குமார், சீர்காழி வட்டாட்சியர் ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஆடிப் பாடி மகிழ்ந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதன் தொ டர்ச்சியாக அனைவருக்கும் மத்தாப்பு, புஸ்வாணம் உள்ளிட்ட பட்டாசுகள் வழங்கப்பட்ட நிலையில்,  அனைவரும் அதை வெடித்து தீபா வளி வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு  வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சிய ரின் இந்த செயல் பலரது பாராட்டு களை பெற்று வருகிறது.