திருவாரூர், ஏப்.29 - கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேளாண்மை துறையால் தெரிவிக்கப்படும் சிறப்பு சாகுபடி திட்ட முறைகளை கையாண்டு கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களது சாகுபடி பயிர்களை பாது காத்து அதிக லாபம் பெற்றிடலாம். கோடை காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டு நீர் பாசன முறையை முழுமையாக பயன்படுத்த வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்களது பயிருக்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் மற்றும் மாலை 5 மணிக்கு பின் நீர் பாய்ச்சிட உகந்த நேரமாகும். குறிப்பாக கோடை மழை பெய்யும்போது விவசாயிகள் தங்களது நிலத்தில் கோடை உழவு செய்திட வேண்டும். இதனால் மண்ணின் அடியில் உள்ள களை விதைகள் மற்றும் தீமை செய்யும் பூஞ்சா னங்கள், பூச்சிகள் அழிக்கப்படும். மேலும் மழைநீர் மண்ணுக்கடியில் எளிதில் புகுந்து ஈரப்ப தத்தை தக்க வைப்பதுடன் பயிரின் வேர்கள் எளிதில் மண்ணில் பரவி உரத் தேவையை குறைத்து, செழிப்பாக வளர்வ துடன் கூடுதல் மகசூல் கிடைத்திட வாய்ப்பாக அமைகிறது
எள் சாகுபடி
அதிக நீர் தேவையின்றி, குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய எள் பயிரையும் கோடையில் சாகுபடி செய்ய லாம். எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை அளவே போதுமானதாகும். எள் பயிர் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக் கூடியது. திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் எள் சாகுபடி செய்திட 500 ஹெக்டேர் இலக்கு பெறப்பட்டுள்ளது.
நிலக்கடலை சாகுபடி
திருவாரூர் மாவட்டத்திற்கு கோடை கால சிறப்பு சாகுபடி திட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்திட 50 ஹெக்டேர் இலக்கு பெறப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிரை நல்ல நீர் ஆதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம். கோடை சாகுபடிக்குத் தேவை யான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் இதனை 50 சதவீதம் மானியத்தில் பெற்றுப் பயன்பெறலாம்.
பயறுவகை சாகுபடி
திருவாரூர் மாவட்டத்திற்கு 1800 ஹெக்டேர் உளுந்து பயறு வகை பயிரும், 5 ஹெக்டேர் பச்சை பயறு பயிரும் கோடை காலத்தில் சாகுபடி செய்திட இலக்கு பெறப்பட்டுள்ளது. கோடையில் மாற்றுப் பயிராக பயறு வகைப் பயிர்களை சாகு படி செய்யும்போது அவற்றின் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து சேகரிக்கப்பட்டு மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் எள், நிலக்கடலை மற்றும் பயறு வகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம். மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வானிலை முன் அறிவிப்பினை தங்களது செல்போனில் உழவன் செய லியில் பார்த்து தெரிந்து கொண்டு, அதற்கேற்ப வேளாண் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் அருகா மையில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத் தினை அணுகிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.