திருத்துறைப்பூண்டி, செப்.25- கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் மக்களுக்கு சென்று சேராமல், சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க கோரி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா பாமணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நிகழ்வில் வி.ச.ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கே.வேதரெத்தினம், கிளை செயலாளர்கள் முன்னிலை வகித்த னர். மாவட்டக்குழு உறுப்பினர் டி.சுப்பிரமணி யன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், வாலிபர் சங்கம் மாவட்டச் செயலா ளர் ஏ.கே.வேலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் மக்களுக்கு சென்று சேராமல், சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். குடிநீர், சாலை, அங்காடி, பாலம், குளத்தின் படித்துறை உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் ஆறுமுகம், திருத்துறைப்பூண்டி சரக வருவாய் ஆய்வாளர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் ஆகி யோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், குறுகிய காலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி கொடுத்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.