districts

img

தரங்கம்பாடி பேரூராட்சியில் கை சின்னத்திற்கு வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை, ஏப்.11 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிப் பகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில்  மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா-வுக்கு கைச் சின்னத்தில் வாக்குச் சேகரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலா ளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பின ருமான  நிவேதா எம்.முருகன் வாக்குச் சேக ரிப்பை துவக்கி வைத்தார். தரங்கம்பாடி பேரூர் செயலாளர் எஸ்.கே.முத்துராஜா, பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, குமர வேல், திருக்கடையூர் இரா.செந்தில் மற்றும்  பேரூராட்சி நிர்வாகிகள், வார்டு செயலா ளர்கள், உறுப்பினர்கள் பேரூராட்சிப் பகுதி களில் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.