அரியலூர், ஜன.1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டக் குழு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு, இடைக்கமிட்டி வாரியாக அரிசி வசூல் செய்து 50 சிப்பம் அனுப்ப திட்டமிடப்பட்டது. அதன்படி, தா.பழூர் இடைக்கமிட்டி சார்பில் ஏழு சிப்பம் (175 கிலோ) அரிசி, ஒரு பிஸ்கட் பண்டல், அரியலூர் சிஐடியு சார்பில் 2 சிப்பம் (60 கிலோ), அரியலூர் இடைக்கமிட்டி சார்பில் ஒரு சிப்பம் (25 கிலோ), செந்துறை ஏ.கந்தசாமி ஒரு சிப்பம், ஆண்டிமடம் ஆர்.இளவரசன் ஒரு சிப்பம், ஜெயங்கொண்டம் குடிநீர் கோவிந்தராஜ் ஒரு சிப்பம் என மொத்தம் 335 கிலோ அரிசி மற்றும் ஒரு பண்டல் ரஸ்க் உள்ளிட்டவை நிவாரணப் பொருட்களாக வசூலிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.துரைசாமி, அரியலூர் ஒன்றியச் செயலாளர் அ.அருண்பாண்டியன், கட்சியின் மூத்த தலைவர் சிற்றம்பலம், கயர்லாபாத் கிளை செயலாளர் லோகேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட ஒன்றியப் பகுதிகளிலும் நிவாரணப் பொருட்கள் வசூல் செய்யப்பட்டன.