districts

img

நல்லாடையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை, ஆக.10 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி  ஒன்றியம், நல்லாடையில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பின ரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முகாமில் நல்லாடை, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, அரசூர், கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சி களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  குடிநீர், சொத்து வரி, வீட்டு மனைப் பட்டா, முதி யோர் உதவித்தொகை, ஊரக வளர்ச்சித்துறை மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, வேளாண்மைதுறை என 15 வகை  சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெறும் வகையில் துறை கள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 200- க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப் பட்டன.