தஞ்சாவூர், ஆக.30 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்தி ரராஜன்பட்டினத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்து அரசுத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மீன்வளத்துறை சார்பில் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான, குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம், 10 மீன வர் பயனாளிகளுக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கினார். தேசிய கீதம் பாடிய அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேருக்கு தனது சொந்தச் செலவில் புத்தகப்பை வழங்கினார். இதில், நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை பொது மக்கள் அரசு அலுவலர்களிடம் வழங்கினர். பாபநாசம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதி, ராஜகிரி ஊராட்சி மன்றத் தலைவர் சமீமா பர்வீன் முபாரக் ஹுசைன், மாவட்ட ஊராட்சி செயலர் பாரதிதாசன், பாபநாசம் தாசில்தார் செந்தில் குமார், பாபநாசம் பிடிஓ-க்கள் சிவக்குமார், குமார் உட்பட ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம மக்கள் பங்கே ற்றனர். இதில் ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், சரபோஜி ராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.