தஞ்சாவூர், அக்.31- தஞ்சாவூர் அருகே, நீலகிரி ஊராட்சியில் திருவள்ளுவர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மழைக் காலத்தில் கொசுக்கள் பெருகி நோய்கள் பரவாமல் தடுக்கும் வித மாகவும், சுகாதாரத்தை பேணும் வகையி லும் தூய்மை விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது. கிரீன்லேண்ட் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவி கள், தூய்மைப் பணியாளர்கள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள், குடியிருப்பு மக்கள் விழிப் புணர்வு பதாகைகளை ஏந்தி, பேரணியாக சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதைத் தொடர்ந்து தேங்கிக் கிடந்த குப்பை கள், டயர்கள் மற்றும் வளர்ந்திருந்த புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. குடியிருப்போர் சங்கத் தலைவர் மதி யரசு, செயலாளர் தனுஷ்கோடி, பொருளாள ரும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலரு மான பன்னீர்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.