districts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 30 -

     மயிலாடுதுறை நகராட்சிப் பள்ளிகளில் தூய்மைப் பணி களுக்கு தனியாரை ஒப்பந்த முறையில் அனுமதிக்க நகராட்சி  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதைக் கண்டித்து இந்திய  தொழிற்சங்க மையம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு  வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                                              

     கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சிப் பள்ளி களில் துப்புரவு மற்றும் தூய்மைப் பணி செய்துவரும் தொழி லாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் (மாதம் ரூ.5000) நாள்  முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். இந்த வருவாயின் மூலமே தங்களது குடும்பத்தை பல சிரமங்களுக்கு மத்தியில்  நடத்தி வருகின்றனர். தற்போது செய்து வந்த அந்த வேலைக் கும் வேட்டு வைப்பதுபோல், நகராட்சி நிர்வாகம் தூய்மைப்  பணியை ஒப்பந்த முறையில் தனியாருக்கு கொடுத்து, இவர் களை வேலையிலிருந்து வெளியேற்றும் கொடுமை அரங்கேற இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் இச்செயலை கைவிட வேண்டும்.

    ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கே வேலை கொடுத்து, அவர்களை பாதுகாக்க வேண்டும் என  வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சிப் பள்ளி  துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) ஜி.சாந்தி தலைமை வகித்தார்.

   சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாநிலத் துணைத் தலைவர் ஆர். இராமானுஜம், மாவட்டத் துணைத் தலைவர் பாரதிமோ கன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர்.