அறந்தாங்கி, மே 13-
சிஐடியுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளை சிஐடியு-க்கே வழங்க வேண்டும். தொழிற் சங்க பாகுபாடு காட்ட கூடாது. டிராபிக் பிரி வில் நடைபெறும் ஊழல்களையும், முறை கேடுகளையும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். டிராபிக் பிரிவில் ஆளும்கட்சி தலையீட்டை அனுமதிக்க கூடாது. அறந் தாங்கி கிளையில் சீனியாரிட்டி அடிப்படை யில், சூழல் முறை பேட்ஜ் அமல்படுத்த வேண்டும். சிஐடியு நிர்வாகிகளை தொ டர்ந்து பழிவாங்கும் கிளை மேலாளர் மணி வண்ணன் மற்றும் டிராபிக் கணக்காளர் வீர குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் அறந்தாங்கி கிளை அலு வலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற் றது.
மத்திய சங்க துணைச் செயலாளர் கோ பாலகிருஷ்ணன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், மண்டல தலைவர் கே.கார்த்திகேயன், மண்டல பொரு ளாளர் எம்.முத்துக்குமார், துணை பொதுச் செயலாளர் எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் பேசினர்.
மண்டல துணைத்தலைவர் சாமி அய்யா, ஒருங்கிணைப்பாளர் கர்ணா, போக்கு வரத்து அறந்தாங்கி கிளைச் செயலாளர் பி.காமராஜ், கிளை தலைவர் பி.மகேந்திரன் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.