districts

img

சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

திருச்சிராப்பள்ளி, செப்.19- சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய சங்கம் சேரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தியும்  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்தும் திருச்சியில் சிஐடியு அரசு விரைவு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்கு வரத்துக்கழக பணிமனை முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் அருள் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், சங்க பொருளாளர் மகேந்தி ரன், சங்கத் தலைவர் ஜான்ஆச்சரி யம், தரைக்கடை சங்க தலைவர் துரைராஜ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிஐடியு  அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று மலைக்கோட்டை கிளை முன்பு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  சிஐடியு மாநகர் மாவட்ட தலை வர் சீனிவாசன் தலைமை வகித் தார். சிஐடியு மாநகர் மாவட்ட செய லாளர் ரெங்கராஜன் பேசினார். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கருணா நிதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின்,  மாவட்ட பொருளாளர் ரங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ண சாமி ஆகியோர் பேசினர்.