திருச்சிராப்பள்ளி, ஜூலை 4 திருச்சி கரூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் நவரதம் என்ற பெயரில் பேருந்துகளை இயக்க முடிவு செய்து 3.7.24 முதல் திருச்சி - சேலம் ரூட்டில். 9 இடங்க ளில் மட்டும் நின்று செல்லும் வகை யில் 17 பேருந்துகளை இயக்குகி றது. ஆனால். இந்த வண்டிக்கு நடத்துனர் போடாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையம். உட்பட 9 இடங்களிலிலும். கண்டக்டர் கள் தனித்தனியாக பணியமர்த்தப் பட்டு. அவர்கள் பேருந்து நிற்கும் 9 இடங்களில் டிக்கெட் போட்டுவிட்டு, பணத்தையும் டிக்கெட் புக்கையும் ஓட்டுனரிடம் கொடுத்து விடுவார் கள். இதன் காரணமாக. ஒவ்வொரு இடத்திலும் 10 நிமிடம் வண்டி நிற்க வேண்டி உள்ளது. இதனால். திருச்சி to சேலம் பயணிப்பவர்கள். மூன்றரை மணி நேரத்தில் சென்ற நிலையில் இதனால் தற்போது 5 மணி நேரத்திற்கு மேலாகிறது. பேருந்து அதிக நேரம் செல்வ தால் பின்னர் வரும் தனியார் பேருந்துகள். அரசு பேருந்துகளை முந்தி சென்று சரியான சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் தனியார் பேருந்தை நாட ஆரம்பித் திட வழிவகை செய்திடும்.
எனவே நவரதம் போக்குவரத்தை துவக்கும் போக்குவரத்து கழக நிர்வா கத்தை கண்டித்தும், 9 இடங்களில் நின்று செல்லும் பேருந்தில். ஒட்டு னரை நியமித்து. கூடுதலாக ஒன்ற ரை மணி நேர பயண நேரத்தை குறைத்திட வலியுறுத்தியும். சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அரசு போக்குவரத்து பணி யாளர் சங்கம் சார்பில் வியாழ னன்று திருச்சி புறநகர் டெப்போ முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மத்திய சங்க நிர்வாகி முத்து கருப்பன். தலைமை தாங்கினார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், நிர்வாகிகள் மாரி யப்பன், கார்த்தி மற்றும மற்றும் அரசு போக்குவரத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் பேசினர். முடிவில்.மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.