தேனி, டிச.16- சாலையோர வியாபாரிகளின் கடை மேற்கூரைகளை அகற்றி அரா ஜகத்தில் ஈடுபட்ட வீரபாண்டி பேரூ ராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலையோர வியாபாரிகளின் கடை களுக்கு மேற்கூரைகள் அமைத்திட நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஜெய பாண்டி தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை சிஐடியு தேனி மாவட்ட துணைத் தலைவர் சி.முருகன் பேசி னார். சிஐடியு தேனி மாவட்டச் செய லாளர் எம்.ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.பிச்சை மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் நீலமலை, செல்வராஜ், வாலிபர் சங்க தேனி தாலுகா தலைவர் முத்துக் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந் தித்து கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.